ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கடற்கரை கையுந்து பந்து போட்டி: ஏ.வி.சி. கல்லூரி மாணவிகள் சாதனை

மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற

Updated On :23 ஜனவரி 2019, 9:32 am IST

மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற பெண்களுக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில், முதலிடம் பெற்று 3-ஆவது ஆண்டாக தொடர்ந்து சாதனை படைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையில் மாநில அளவில் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான 2 நாள் கடற்கரை கையுந்து பந்து போட்டி நடைபெற்றது. இதில், நாகை  மாவட்டம் சார்பில் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் துறை மாணவி ஆர். இளவரசி, மூன்றாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் துறை மாணவி ஆர். மகாலெட்சுமி ஆகியோர் பங்கேற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றனர். இதன்மூலம் இக்கல்லூரி 3-ஆவது முறையாக தொடர்ந்து இந்த சாதனையைப் படைத்துள்ளது. வெற்றிபெற்ற மாணவிகளை ஏ.வி.சி. கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு தலைவர் என். விஜயரங்கன், செயலர் கே. கார்த்திகேயன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், முதல்வர் ஆர். நாகராஜன், உடற்கல்வி இயக்குநர்கள் ஜே. ராஜ்குமார், எம். கீதா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.