சீர்காழி அருகே மேலப்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள வெள்ளடைநாதர் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு பொதிசோறு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெயிலில் வெம்மையாலும், தண்ணீரின் வேட்கையுடனும், பசியாலும் வருந்தி வந்த சுந்தரருக்கும், அவருடன் கூடிய அடியவர்களுக்கும், எதிர்கொண்டு வேதியராய் வேடம் பூண்டு பெரிய சுகமான பந்தல் அமைத்து, அதில் அவர்களைக் களைப்பாறச் செய்து அவர்களுக்கு மணமுள்ள சுவையான குளிர்ந்த நீரையும், பசி தீர பொதிசோறும் அருந்தினர் என்ற சம்பவம் சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மேலப்பாளையம் கிராமத்தில் வெள்ளடைநாதர் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு பொதிசோறு வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவெள்ளடைநாதருக்கும், சுந்தரருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல், கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் மும்மாரி அம்மன் கோயிலில் சிறப்பு யாகமும், யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
சித்திரை பௌர்ணமியையொட்டி, கீரங்குடியில் உள்ள குடவரசியம்மன் கோயில், மாங்கணாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மின் துறையில் 70,000 காலிப் பணியிடங்கள்! இந்த ஆண்டு 15,000 இடங்கள் நிரப்பப்படும்! நிர்மல்குமார்

ஹார்ட் பீட் - 3 வெளியீட்டில் தாமதம்! காரணம் என்ன?

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!
நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


