ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்காலிக மூடல்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அலுவகலம் தற்காலிகமாக மூடப்பட்டது.

News image
சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.
Updated On :7 ஆகஸ்ட் 2020, 1:10 pm

DIN

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அலுவகலம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு மருத்துவமணையில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரி லலிதா ஆய்வு, கரோனா பாதித்தவர்கள் அனுமதிக்க சிறப்பு வார்டு அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டர். அப்போது மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பாதிப்பு உள்ளதால் அலுவலகம் தற்காலிகமாக மூடபடுகிறது.

நாகை மாவட்டத்தில் கரோனாவால் 900 பேர் பாதிக்கப்பட்டு 500 பேர் வீடு திரும்பிய நிலையில் 400 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் மேலும் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படுவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். 

பின்னர் அலுவலக ஊழியர்களுக்கு தொற்று இல்லாமல் இருந்தால் மட்டுமே திங்கட்கிழமை முதல் அலுவலகம் செயல்படும், தொற்று இருந்தால் தொடர்ந்து மூடப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.