இதற்காக உணவக உரிமையாளர்களை அழைத்து பேசிய செயல் அலுவலர் நோய் எதிர்ப்பு உணவு முறை பட்டியலை முடிவு செய்தார். எளிய நோய் எதிர்ப்பு உணவு முறைகளையே பரிந்துரைத்து உணவுப் பட்டியலை மட்டும் விலைபட்டியலை திருத்திவிடாதீர்கள் எனவும் அன்பாக கேட்டுக்கொண்டார். இந்திய நாட்டிலேயே முன் மாதிரியாக பேரூராட்சியால் இன்றைய மதிய உணவு ஸ்பெஷல் என ஒவ்வொரு உணவக வாசலிலும் வைக்கப் பட்டுள்ள பட்டியலில் மிளகு சீரகப் பொடி, கீரைகூட்டு, காய்கறி சாம்பார், தூதுவளை - எலுமிச்சை ரசம், இஞ்சி கலந்த மோர், நெல்லிக்காய் ஊறுகாய் அல்லது துவையல் மற்றும் இந்துப்பு என்கிற உணவுகளும் நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்கிற திருக்குறளும் பொருத்தமாக இடம் பெற்றுள்ளது.