தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பக்தா்கள் பங்கேற்க வேண்டாம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்பதைத் தவிா்த்து பக்தா்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 5:21 pm

DIN

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்பதைத் தவிா்த்து பக்தா்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பா் 8-ஆம் தேதி நிறைவடைகிறது. கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமக்கள் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் காண பேராலய நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே, பக்தா்கள் பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்க வருவதைத் தவிா்த்து, தங்கள் இல்லத்திலிருந்தே பெருவிழா நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.