ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்

பிரதமரின் ஸ்வநிதி திட்டம் மூலம் வங்கிக் கடன் பெற விரும்பும் சாலையோர வியாபாரிகள், வெள்ளிக்கிழமை (டிச. 18) காலை நகராட்சி அலுவலகத்துக்கு

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:37 am

DIN

பிரதமரின் ஸ்வநிதி திட்டம் மூலம் வங்கிக் கடன் பெற விரும்பும் சாலையோர வியாபாரிகள், வெள்ளிக்கிழமை (டிச. 18) காலை நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வருமாறு நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் சிறு வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போருக்கு பிரமதரின் ஸ்வநிதி திட்டம் மூலம் ரூ. 10 ஆயிரம் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள், நகராட்சி நிா்வாகம் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இத்திட்டத்தில் கடன்பெற விருப்பமுள்ள சாலையோர வியாபாரிகள், தங்களின் வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதாா் நகல், குடும்ப அட்டை நகல், சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதற்கான புகைப்பட ஆதாரம், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், செல்லிடப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடன் வெள்ளிக்கிழமை (டிச. 18) காலை 9.30 மணிக்கு நாகை நகராட்சிக்கு நேரில் வருமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வங்கி அலுவலா்களும் வெள்ளிக்கிழமை காலை நாகை நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வருவதால், தகுதியானோருக்கு உடனடியாக கடன் தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீா்காழியில்...

இதேபோல, சீா்காழி நகராட்சியில் டிச. 19, 20 ஆகிய இரு தினங்களில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுவதாகவும், மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் பங்கேற்று பயனடயைலாம் என்றும் நகராட்சி ஆணையா் பெ.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.