ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மூச்சுப் பயிற்சி செய்து காட்டிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

வேதாரண்யம் பகுதியில் அம்மா சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், விழா மேடையில் மூச்சு பயிற்சி செய்து காட்டிய போது எழுந்த ரயில் போன்ற ஓசை பார்வையார்களை ஈர்க்கச் செய்தது

News image
புஷ்பவனத்தில் மூச்சுப் பயிற்சி செய்து காட்டிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
Updated On :20 டிசம்பர் 2020, 12:00 pm

DIN

வேதாரண்யம் பகுதியில் அம்மா சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், விழா மேடையில் மூச்சுப் பயிற்சி செய்து காட்டிய போது எழுந்த ரயில் போன்ற ஓசை பார்வையார்களை ஈர்க்கச் செய்தது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த நாகக்குடையான், புஷ்பவனம், புஷ்கரணி ஆகிய மூன்று கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார். 

புஷ்பவனத்தில் விழா மேடையில் பேசிய அமைச்சர், மூச்சுப் பயிற்சி செய்வதன் அவசியம், அதன் மூலம் கிடைக்கும் பலன்களை விளக்கினார். அப்போது, மூச்சுப் பயிற்சியை எப்படி செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுக்காக ஒலி வாங்கியின் முன்பு செயல் விளக்கமாக செய்தார்.

அந்த ஓசை ரயில் இயந்திரத்தில் ஏற்படும் பிஸ்டன் இயக்கத்தை நினைவூட்டுவதாக அமைந்தது. அந்த ஓசை பார்வையாளர்களை ஈர்த்ததோடு, மூச்சுப் பயிற்சி குறித்த அமைச்சரின் ஆலோசனையை கவன சிதறல் இல்லாமல் செவிமடுக்கவும் செய்தது.

நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியார் பிரவீன் பி.நாயர் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.