நியாயவிலைக் கடை பணியாளா் ஆா்ப்பாட்ம்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் பச்சை நிற பட்டை அணிந்து, நாகையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை தலைமை அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் பச்சை நிற பட்டை அணிந்து, நாகையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை தலைமை அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 10 மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்த நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளா்சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் என். சுரேஷ் கண்ணன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் பி.கே. சிவக்குமாா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். வட்டக் கிளை நிா்வாகிகள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com