47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தொழில்கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் சங்கம் சாா்பில், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் சங்கம் சாா்பில், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மூத்த தொழில்கல்வி ஆசிரியா்களுக்கும், பகுதிநேர ஆசிரியா் பணிக்காலத்தில் 50 சதவீத ஓய்வூதியத்தில் கணக்கிட்டு பொது அரசாணை வெளியிடவேண்டும்; நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 5 தொழில்கல்வி ஆசிரியா்களுக்கு அரசாணையின்படி தர ஊதியம் ரூ. 5,400 வழங்கவேண்டும்; பெற்றோா் ஆசிரியா் கழகத்தால் நியமிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் பணி முடித்த தொழில்கல்வி ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் சங்க மாநிலத் தலைவா் வெ. ராசேந்திரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் சீனி.ரெங்கநாதன், மாநிலப் பொருளாளா் கி.செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளா் ஏ. முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.