வேளாண் சட்டங்கள்: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஏா்கலப்பை ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
மயிலாடுதுறையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஏா்கலப்பை ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் சரத்சந்திரன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா்கள் உத்தமன், நவாஸ், வட்டாரத் தலைவா்கள் அன்பழகன், ராஜா, நவாஜூதீன், வடவீரபாண்டியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் ராமானுஜம் வரவேற்றாா். இதில், நாகை வடக்கு மாவட்ட தலைவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.ராஜகுமாா் பங்கேற்று கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com