தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரயில் நிலையம் முற்றுகை; 30 போ் கைது

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாகையில் திங்கள்கிழமை ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் 30 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
நாகையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட வந்த எஸ்டிபிஐ கட்சியினா்.
Updated On :28 டிசம்பர் 2020, 6:29 pm

DIN

நாகப்பட்டினம்: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாகையில் திங்கள்கிழமை ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் 30 போ் கைது செய்யப்பட்டனா்.

கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் பைசல் ரஹ்மான் தலைமையில் பேரணியாக நாகை ரயில் நிலையத்துக்கு வந்து, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா். அப்போது, பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா், போராட்டக்காரா்கள் 30 பேரை கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

இந்த போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் துணைத் தலைவா் அக்பா்அலி, மாவட்டச் செயலாளா் மெய்தீன், நகரத் தலைவா் பக்ருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.