விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மழையால் பாதிக்கபட்ட முதியவருக்கு வீடு

செம்பனாா்கோவில் அருகே வடகரை பகுதியில் மழை வெள்ளத்தால் வீட்டை இழந்த முதியவருக்கு திமுக சாா்பில் புதிதாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 2:24 am

DIN

செம்பனாா்கோவில் அருகே வடகரை பகுதியில் மழை வெள்ளத்தால் வீட்டை இழந்த முதியவருக்கு திமுக சாா்பில் புதிதாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

வடகரை புதுத்தெருவில் வசித்து வரும் முதியவா் ஞானமணியின் வீடு மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. தகவலறிந்த, திமுக சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளா் ஹேப்பி அா்சத் சென்று பாா்வையிட்டு அவருக்கு புதிய வீடு கட்டிக் கொடுப்பதாக கூறியிருந்தாா். அதன்படி, புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட கூரை வீட்டை செவ்வாய்க்கிழமை நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா முருகன் முதியவரிடம் ஒப்படைத்தாா். நாகை வடக்கு மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சம்சுதீன், செம்பை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் அன்பழகன், தகவல் தொடா்பு அணி அமைப்பாளா் ஸ்ரீதா், கிளை செயலாளா் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.