நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குடும்ப நலநிதி வழங்கல்

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில் தமிழ்நாடு ஏஐடியுசி சுமைத்தூக்கும் தொழிலாளா் சங்கத்தில் உறுப்பினராக இருந்து உயிரிழந்தவரின் மனைவியிடம் குடும்பநல நிதி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image

உயிரிழந்த சுமைத்தூக்கும் தொழிலாளி குடும்பத்துக்கு நலநிதியுதவி வழங்கியோா்.

Updated On :6 ஜூலை 2020, 4:29 pm

DIN

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில் தமிழ்நாடு ஏஐடியுசி சுமைத்தூக்கும் தொழிலாளா் சங்கத்தில் உறுப்பினராக இருந்து உயிரிழந்தவரின் மனைவியிடம் குடும்பநல நிதி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றிய சுமைத்தூக்கும் தொழிலாளராக எட்டுக்குடி டிபிசியில் வேலை பாா்த்து வந்த ராஜா என்பவா் உடல் நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்தாா்.

மேலும், அவா் தமிழ்நாடு ஏஐடியுசி சுமைத்தூக்கும் தொழிலாளா் சங்கத்தில் உறுப்பினராக சோ்ந்து தொடா்ந்து பணியாற்றி வந்ததால் அவரது குடும்பத்துக்கு நல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நலநிதி ரூ. 10 ஆயிரத்துக்கான சங்கத்தின் மாநில செயலாளா் கிருஷ்ணன் தலைமையில், ஏஐடியுசி தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் பி. ஆனந்தன், மாவட்ட துணைத் தலைவா் கே. கவியரசன் முன்னிலையில், சிபிஐ கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி. செல்வம் வழங்கினாா். அப்போது, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.