சீர்காழி அடுத்த அரசூர் போக்குவரத்துறை அலுவலகம் எதிரே சீர்காழி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் வேலு தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
லாரிகளுக்கான சாலை வரியை நீக்க வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடியை அகற்றகோரியும் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியுடன் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.