புதிய மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி அல்லது மாவட்ட தலைமை மருத்துவமனை என ஏதாவது ஒன்றை சீர்காழியில் அமைத்திட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட தனி அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட தனி அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள லலிதா வினை சீர்காழி நலம் பாரம்பரிய அறக்கட்டளையினர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர்.
அந்த மனுவில் சீர்காழியை தலைமை இடமாக கொண்டு தனி வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும், கொள்ளிடத்தை தலைமை இடமாக கொண்டு தனி தாலுக்கா அமைத்திட வேண்டும், மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவ கல்லூரியையோ அல்லது மாவட்ட தலைமை மருத்துவமனையையோ சீர்காழியில் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
அறக்கட்டளை செயலர் சுதாகர், சட்ட ஆலோசகர் சுந்தரய்யா, செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ் அலி, சுரேஷ்குமார், ராஜசேகர், ரவி, சுரேஷ், அன்பு ஆகியோர் தனி அதிகாரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மன நலம் பாதித்த இளைஞருக்கு சிக்கலான ஒட்டுறுப்பு சிகிச்சை

கருப்புக் கொடி போராட்டம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


