மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்கம்பியில் மூங்கில் கம்புகள் உரசியதால் ஆதமங்கலத்தில் தீ விபத்து

ஆதமங்கலத்தில் மின்கம்பியில் மூங்கில் கம்புகள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :15 ஜூன் 2020, 9:22 am

DIN

ஆதமங்கலத்தில் மின்கம்பியில் மூங்கில் கம்புகள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. 

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம், ஆதமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜீவா நகரிலுள்ள ராமையா மகன் ராஜசேகருக்கு சொந்தமான சாரதா பண்ணையில் தேவையற்ற மூங்கில் மற்றும் கருவேல மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. அப்போது மேலே சென்று கொண்டிருந்த ஹச்டி லைனில் மூங்கில் கம்புகள் உரசியது. இதில் மூங்கில் கம்புகள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கிய நிலையில் தீ மளமளவென அருகிலுள்ள தரிசு நிலத்திற்கு பரவியது.

Story image

மேலும் பலத்த காற்று அடித்ததால் தீயானது மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. உடனடியாக ஊராட்சி சார்பில் கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். இதையடுத்து சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர். இதில் அங்குள்ள மூங்கில், கருவேல மரம், ஆர்எஸ்பதி, சவுக்கு, வேம்பு, உள்ளிட்ட  பல மரங்கள் தீயில் எரிந்து நாசனமாயின.

Story image

மேலும் இந்த தீ விபத்தில் வீடுகள் மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலா சரவணன், கிராம நிர்வாக அலுவலர் எஸ்.தரண்யா, சிபிஎம் ஒன்றிய குழுவை சேர்ந்த நடராஜன், சிபிஎம் கிளைச் செயலாளர் சண்முகம், வார்டு உறுப்பினர் கல்பனா மற்றும் பொதுமக்கள் பலர் சம்பவ இடத்தில் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.