தமிழகத்தில் கரோனா தொற்றை தடுக்க நடைமுறையில் உள்ள பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நல வாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 2 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கி நடைபெறும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரோனா தடுப்புக்கான பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நல வாரியத்தி உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்ட நெசவுத் தொழில் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 2 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கும் மாதம் ரூ.ஆயிரம் வீதம் 2 மாதங்களுக்கு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் இலவச மின்சாரம் பெற்று தொழில் செய்யும் பதிவு செய்யாத நெசவாளர் 73, 184 பேர் இந்த உதவித் தொகையை பெறுவார்கள்.
அரசின் இந்த உதவித் தொகை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


