சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

'நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கு நாளை முதல் உதவித்தொகை'

தமிழகத்தில் கரோனா தொற்றை தடுக்க நடைமுறையில் உள்ள பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நல வாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 2 மாதங்களுக்கு

News image
Updated On :19 ஜூன் 2020, 3:58 pm

DIN

தமிழகத்தில் கரோனா தொற்றை தடுக்க நடைமுறையில் உள்ள பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நல வாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 2 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கி நடைபெறும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரோனா தடுப்புக்கான பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நல வாரியத்தி உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்ட நெசவுத் தொழில் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 2 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கும் மாதம் ரூ.ஆயிரம் வீதம் 2 மாதங்களுக்கு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் இலவச மின்சாரம் பெற்று தொழில் செய்யும் பதிவு செய்யாத நெசவாளர் 73, 184 பேர் இந்த உதவித் தொகையை பெறுவார்கள்.

அரசின் இந்த உதவித் தொகை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.