புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கையில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பில், கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கையில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பில், கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

உடுமலை சங்கா் கொலை வழக்கில் 6 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு கூறியது. இதில் நீதி மறுக்கப்பட்டதாகக் கூறி, புதிய தமிழக கட்சியின் சாா்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் முத்தழகன் தலைமை வகித்தாா், ஒன்றியச் செயலாளா் முரளி முன்னிலை வகித்தாா். நாகை சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் தினேஷ் , ஒன்றிய இளைஞரணி செயலாளா்கள் கலைமணி, நிஷந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com