ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்: வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு

கோடியக்கரையில் பருவ கால மீன்பிடியில் வெளியூர் மீனவர்கள் பங்கேற்க எதிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உள்ளுர் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடிவு

News image
கடலுக்கு செல்லும் மீனவர்கள்.
Updated On :1 நவம்பர் 2020, 6:10 am

DIN

கோடியக்கரையில் பருவ கால மீன்பிடியில் வெளியூர் மீனவர்கள் பங்கேற்க எதிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உள்ளுர் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் நடைபெறும் மீன்பிடிப் பருவத்தில் வெளி மாவட்ட மீனவர்கள் படகுகளுடன் வந்து தற்காலிகமாகத் தங்கி மீன்பிடியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், மீன்வளம் குறைந்து வருவதாலும், கரோனா தொற்று இருப்பதாலும் நிகழ் பருவ மீன்பிடிக்கு வெளியூர் மீனவர்களுக்கு உள்ளுர் பகுதி மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து,உள்ளுர் மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, வேதாரண்யத்தில் 18 கிராம மீனவர்களிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்று பேசினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆனால்,மாவட்ட அளவில் மீனவர்களை அழைத்து பேசி பிரச்னைக்கு தீர்வு காண கடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தார்.

போராட்டம் ஒத்திவைப்பு: இந்த நிலையில், மீனவ பிரதிநிதிகள் கலந்து பேசினர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து மீன்பிடிக்கச் செல்ல திட்டமிடப்பட்டது. உறுதியளிக்கப்பட்டபடி ஒரு வாரத்தில் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை மீண்டும் தொடரவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மீனவர்கள் 3 நாள்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் செல்ல தொடங்கினர். இதனிடையே, கடல் சற்று சீற்றமாக காணப்படுவதால் குறைவான எண்ணிக்கையிலே படகுகள் செல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.