இதையடுத்து,உள்ளுர் மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, வேதாரண்யத்தில் 18 கிராம மீனவர்களிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்று பேசினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆனால்,மாவட்ட அளவில் மீனவர்களை அழைத்து பேசி பிரச்னைக்கு தீர்வு காண கடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தார்.