ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சீர்காழி புறவழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம் 

சீர்காழி புறவழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

News image
சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பெயர்பலகை.
Updated On :5 நவம்பர் 2020, 12:42 pm

DIN

சீர்காழி புறவழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எருகூர் முதல் செங்கமேடு வரை 8 கிலோமீட்டர் புறவழிச்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் அரசூர் ரவுண்டானா பகுதியில் புதியதாக சில தினங்களுக்கு முன்பு பெயர் பலகை மற்றும் வழிகாட்டி பலகை 20 அடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய பெயர் பலகை இன்று பெய்த திடீர் மழையால் மண் அரித்து உள்வாங்கி சற்று சாய்ந்த நிலையில் உள்ளது. மீண்டும் கனமழை பெய்யும் நேரத்தில் பெயர்பலகை சாலையில் செல்லும் வாகனங்கள் மீது வாகன ஓட்டிகள் மீது சாய்ந்து பெரும் உயிர் சேதம் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆகையால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அதனை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.