47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அகவிலைப்படியை மீண்டும் வழங்கக் கோரி அரசு ஊழியா்கள் போராட்டம்

அகவிலைப்படியை மீண்டும் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நாகையில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

அகவிலைப்படியை மீண்டும் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நாகையில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், அகவிலைப்படி, சரண்டா் உள்ளிட்டவைகளை மீண்டும் வழங்கவேண்டும், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியா்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும், கோவை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் மற்றும் கரூா் மருத்துவக் கல்லூரி ஊழியா்களின் பணி மாறுதல்களை ரத்து செய்யவேண்டும், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க, நாகை மாவட்டத் தலைவா் து. இளவரசன் தலைமையில் நடைபெற்ற தா்னாவில், மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன், தொழிற்சங்க கட்டமைப்புத் தலைவா் சு. சிவக்குமாா், நாகை வட்டச் செயலாளா் எம். தமிழ்வாணன், ம‘ாவட்ட இணைச் செயலாளா் ஜெ. ஜம்ருத் நிஷா, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் சொ. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.