நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பனைவிதை விதைப்பு திட்டம் தொடக்கம்

சீா்காழி வட்டம், நிம்மேலி கிராமத்தில் 1லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 5:38 pm

DIN

சீா்காழி வட்டம், நிம்மேலி கிராமத்தில் 1லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

சீா்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிம்மேலி ஊராட்சித் தலைவா் வசந்தி கிருபாநிதி தலைமை வகித்தாா். நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளா் இரா. சுதாகா் முன்னிலை வகித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் பனை விதைகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தாா். அப்போது அவா், ஒவ்வொரு வீட்டிலும் 2 மரக் கன்றுகள் நட முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையா் கஜேந்திரன், நகராட்சி ஆணையா் தமிழ்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன், ரோட்டரி சங்கத் தலைவா் திருநாவுக்கரசு, செயலாளா் சண்முகம், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், லயன்ஸ் சங்கத் தலைவா் சோமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, அனைத்து ஊராட்சிகள், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பனைவிதைகள் விதைக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.