புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மயிலாடுதுறையில் தையல் பயிற்சி மையம் திறப்பு

மயிலாடுதுறை சோழம்பேட்டையில் தையல் பயிற்சி மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 5:37 pm

DIN

மயிலாடுதுறை சோழம்பேட்டையில் தையல் பயிற்சி மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சோழம்பேட்டையில் திருஇருதய அருட்சகோதரா்களால் நடத்தப்பட்டு வரும் தேம்பாவணி திறன் வளமைய வளாகத்தில் இப்பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இப்பயிற்சி மைய திறப்பு விழாவுக்கு திருஇருதய சகோதரா்கள் இல்லத் தலைவா் டேவிட்ராஜ் தலைமை வகித்தாா்.

மைய ஒருங்கிணைப்பாளா் பங்கராஸ், மணல்மேடு பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளாா், மயிலாடுதுறை உதவி பங்குத் தந்தை கஷ்மீர்ராஜ் அடிகளாா், புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கேத்தரின், தூய மரியன்னை இல்லத் தலைவா் மரியபுஷ்பம், அந்தோணியாா் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் பாத்திமா செல்வி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூறைநாடு புனித அந்தோணியாா் ஆலய பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளாா் தேம்பாவணி மகளிா் தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்து ஆசி வழங்கினாா்.

மயிலாடுதுறை, மூவலூா், சோழம்பேட்டை, வாணாதிராஜபுரம், கோழிகுத்தி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இப்பயிற்சியில் சோ்ந்த பெண்களுக்கு தையல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.