வேதாரண்யம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை: ஒருவர் கைது 

வேதாரண்யம் அருகே இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட செல்வகுமார்.
கொலை செய்யப்பட்ட செல்வகுமார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மற்றொரு இளைஞரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாய்மேடு சேைாதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் செல்வக்குமார் (29). இவர் காதலிக்கும் பெண்ணின் சகோதரர் கார்த்திக்கும் வேறு சிலருக்கும் அண்மையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, செல்வக்குமாருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் இருவருக்குமிடையே முன்பகை இருந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அரிவாளால் வெட்டப்பட்ட செல்வகுமார், திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

இது தொடர்பாக வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com