ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேதாரண்யம் பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தம்: அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை

வேதாரண்யத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனர்களிடம் அமைச்சர் தலைமையில் 2-ஆவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

News image
அமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தை.
Updated On :31 அக்டோபர் 2020, 6:56 am

DIN

வேதாரண்யத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனர்களிடம் அமைச்சர் தலைமையில் 2-ஆவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் மீன்பிடிப் பருவம் நடைபெறும். இதில், வெளி மாவட்ட மீனவர்கள் படகுகளுடன் வந்து தற்காலிகமாகத் தங்கி மீன்பிடியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், மீன்வளம் குறைந்து வருவதாலும், கரோனா தொற்று இருப்பதாலும் நிகழ் பருவ மீன்பிடிக்கு வெளியூர் மீனவர்களுக்கு உள்ளுர் பகுதி மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக அரசு தரப்பிலான முதல் கட்ட சமாதானக் கூட்டம் வட்டாட்சியர் கே.முருகு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.  இதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, உள்ளுர் மீனவர்கள் கடந்த 3 நாள்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம், அரசு தரப்பிலான 2-வது கட்டப் பேச்சுவார்த்தை இன்று (அக்.31) முற்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Story image

வேதாரண்யத்தில் 18 கிராம மீனவர்களிடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் கிராமத்துக்கு 10 பிரதிநிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.