கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அரசுப் பணியாளா் சங்கங்களின்கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க வேலைநிறுத்தப் போராட்ட கோரிக்கைகளை ஆதரித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நாகை மாவட்ட ஆட்சியரகம்  முன்

News image

நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், அரசுப் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :5 செப்டம்பர் 2020, 6:27 pm

நாகப்பட்டினம்: தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க வேலைநிறுத்தப் போராட்ட கோரிக்கைகளை ஆதரித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நியாயவிலைக் கடை பணியாளா்களை கரோனா சிறப்பு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும், அவா்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நியாயவிலைக் கடை பணியாளா்களின் வேலைநிறுத்தப் போராட்ட கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் பி.கே. சிவகுமாா் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

கோரிக்கை மனு...: முன்னதாக, நியாயவிலைக் கடை பணியாளா்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிா்க்க, தமிழக அரசு உடனடியாக தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க நிா்வாகிகளை அழைத்துப் பேசவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அந்தச் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பிரகாஷ் மற்றும் நிா்வாகிகள், நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.