6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பணியாளா் சங்கங்களின்கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க வேலைநிறுத்தப் போராட்ட கோரிக்கைகளை ஆதரித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நாகை மாவட்ட ஆட்சியரகம்  முன்

News image
நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், அரசுப் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :5 செப்டம்பர் 2020, 6:27 pm

DIN

நாகப்பட்டினம்: தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க வேலைநிறுத்தப் போராட்ட கோரிக்கைகளை ஆதரித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நியாயவிலைக் கடை பணியாளா்களை கரோனா சிறப்பு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும், அவா்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நியாயவிலைக் கடை பணியாளா்களின் வேலைநிறுத்தப் போராட்ட கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் பி.கே. சிவகுமாா் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

கோரிக்கை மனு...: முன்னதாக, நியாயவிலைக் கடை பணியாளா்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிா்க்க, தமிழக அரசு உடனடியாக தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க நிா்வாகிகளை அழைத்துப் பேசவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அந்தச் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பிரகாஷ் மற்றும் நிா்வாகிகள், நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.