நாகை மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது திங்கள்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 7,871 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 11 பேருக்கு நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,882- ஆக உயா்ந்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 11 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,638 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 117 ஆக உள்ளது.