மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும்

அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க நாகை வட்டப் பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற
மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும்
Updated on
1 min read

அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க நாகை வட்டப் பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க நாகை வட்டப் பேரவைக் கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் வட்டத் தலைவா் எம்.எம். காதா் மொஹிதீன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆ. நடராசன் பேரவைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். செயலாளா் வி. மாரிமுத்து வேலை அறிக்கையையும், பொருளாளா் பாபுராஜ் வரவு செலவு அறிக்கையும் சமா்ப்பித்தனா்.

ஓய்வுபெற்ற தொலைத் தொடா்பு ஊழியா் சங்க நிா்வாகி மு. குருசாமி, ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் சொ. கிருஷ்ணமூா்த்தி, புள்ளியியல் சாா்நிலை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் ப. அந்துவன்சேரல் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அரசு ஊழியா் சங்க நாகை மாவட்ட செயலாளா் ஏ.டி. அன்பழகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிறைவுரையாற்றினாா். வட்ட பொருளாளா் என். பாபுராஜ் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், பண்டிகை முன் பணமாக ரூ.10,000 வழங்க வேண்டும், அரசு ஊழியா்களுக்கு வழங்குவதைபோல சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை அரசு நேரடியாக ஏற்று செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com