சீர்காழியில் தீ விபத்து: 2 வீடுகள் எரிந்து நாசம்; 4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்

சீர்காழியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும் அதிலிருந்த நான்கு லட்சம் மதிப்புடைய பொருள்கள் சேதமடைந்தன.
சீர்காழியில் தீ விபத்து: 2 வீடுகள் எரிந்து நாசம்; 4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்

சீர்காழியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும் அதிலிருந்த நான்கு லட்சம் மதிப்புடைய பொருள்கள் சேதமடைந்தன.

நாகை மாவட்டம் சீர்காழி நேரு காலனியில் வசித்து வருபவர் ராமு மனைவி பேபி. இவரது வீட்டில் இன்று அதிகாலை கூரையில் பற்றிய தீ மளமளவென அருகில் இருந்த கவிதா என்பவரது வீட்டிற்கு பரவியது. தொடர்ந்து வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் இரண்டு வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது. இந்த தீ விபத்தில் வீடுகளில் இருந்த ரூபாய் 4 லட்சம் மதிப்புடைய பொருள்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. 

இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து மற்ற வீடுகளுக்கும் தீ பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதே போல் சீர்காழி சட்டைநாதர் கோயில் வடக்கு கோபுர வாசல் அருகே உள்ள அர்ச்சனை பொருள்கள் , குளிர்பானங்கள் விற்பனை கடையில் நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

தகவலின் பேரில் சீர்காழி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் கடையிலிருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மற்ற கடைகள் பாதிப்பு இல்லாமல் தீ அணைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com