நாகை மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா
By DIN | Published On : 17th November 2020 12:00 AM | Last Updated : 17th November 2020 12:00 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 7, 228 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், வெளி மாவட்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஒருவா் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7, 246 ஆக உயா்ந்துள்ளது.
இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 49 போ் திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 6,524 போ் குணமடைந்துள்ளனா். 299 போ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.