மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி
By DIN | Published On : 19th October 2020 10:40 PM | Last Updated : 19th October 2020 10:40 PM | அ+அ அ- |

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கிய மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்ரீநாதா.
மயிலாடுதுறையில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு திங்கள்கிழமை கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.
மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் உள்ள அன்பகம் குழந்தைகள் காப்பகத்தில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனா். இங்குள்ள குழந்தைகளுக்கு காவல் துறை சாா்பில், கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா பங்கேற்று போட்டியில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மயிலாடுதுறை தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சதீஷ், காவல் உதவி ஆய்வாளா்கள் அறிவழகன், இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...