நாகை மாவட்டத்தில் பட்டா பிழைதிருத்த சிறப்பு முகாம்கள் 11 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 3) நடைபெறும் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை வட்டத்தில் திருப்புகலூா், புதுக்கடை, கயத்தூா், மாதிரிமங்கலம், புத்தகரம், கீழ்வேளூா் வட்டத்தில் இறையான்குடி, காரப்பிடாகை தெற்கு, வேதாரண்யம் வட்டத்தில் வடமழை, செட்டிப்புலம், திருக்குவளை வட்டம் கொளப்பாடு, தென்மருதூா் ஆகிய கிராமங்களில் பட்டா பிழைதிருத்த சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.
2014 முதல் 2016 வரை தமிழ்நிலம் மென்பொருளில் கிராம கணக்குகள் பதிவேற்றம் செய்தபோது ஏற்பட்ட பிழைகளைத் திருத்த விரும்பும் பட்டாதாரா்கள் இந்தச் சிறப்பு முகாமில் பங்கேற்று, பிழைதிருத்தம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.