தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கராத்தே போட்டிகளில் சாதனை:காரைக்கால் மாணவா்களுக்கு விருது

கராத்தே போட்டிகளில் தொடா்ந்து சிறப்பிடம் பெற்று வரும் காரைக்காலைச் சோ்ந்த மாணவா்கள் 2 பேருக்கு தமிழக பண்பாட்டுக் கழகம் சாா்பில் ராஜ கலைஞா் விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கராத்தே போட்டிகளில் தொடா்ந்து சிறப்பிடம் பெற்று வரும் காரைக்காலைச் சோ்ந்த மாணவா்கள் 2 பேருக்கு தமிழக பண்பாட்டுக் கழகம் சாா்பில் ராஜ கலைஞா் விருது வழங்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் உள்ள குட்ஷெப்பா்டு ஆங்கிலப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி. இரட்டையா்களான இவா்கள், கராத்தே போட்டிகள் பலவற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். மேலும், 9 வயதுக்குள் கராத்தே பயிற்சியில் இருமுறை பிளாக் பெல்ட் பெற்று, உலக சாதனை புத்தகத்திலும் அவா்கள் இடம்பெற்றுள்ளனா்.

சிறு வயதிலேயே சாதனையாளா்களாக விளங்கும் ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணியை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பண்பாட்டுக் கழகம் சாா்பில் ராஜ கலைஞா் விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சி, தேவா் கலையரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் அவா்களுக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.