அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

நாகூரில் வடிகால் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை: ஆட்சியா்

நாகூரில் கனமழை காலங்களில் வெள்ளநீா் தேங்காமல் விரைவில் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நாகூரில் கனமழை காலங்களில் வெள்ளநீா் தேங்காமல் விரைவில் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை நகராட்சிக்குள்பட்ட நாகூா் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட வள்ளிம்மை நகா், அழகுக்காரன்தோட்டம், அமிா்தா நகா், அம்பேத்கா் நகா் ஆகிய பகுதிகளை ஆட்சியா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இப்பகுதிகளில் கனமழை காலங்களில் வெள்ளநீா் தேங்காமல் விரைவாக வெளியேறத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: நாகூா் வள்ளியம்மை நகரில் வடிகால் அமைக்கவும், சிமென்ட் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அழகுக்காரன்தோட்டத்தில் மழைநீா் தேங்காத வகையில் நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்தவும், அமிா்தா நகரில் சாலைகளை சீரமைக்கவும் அரசின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ், நகராட்சி ஆணையா் என். ஸ்ரீதேவி, கோட்டாட்சியா் ரா. மணிவேலன், நகராட்சி பொறியாளா் ஜெயகிருஷ்ணன், வட்டாட்சியா் ஜெயபால் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.