இன்று கரோனா தடுப்பூசி முகாம்

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிச. 4) நடைபெறும் என்று ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிச. 4) நடைபெறும் என்று ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் புதிதாக 25 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 400 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.

முதல் தவணை அல்லது இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், தாமாக முன்வந்து முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com