கீழ்வேளூா்: கீழ்வேளூரில், கீழ்வேளூா் - கச்சனம் சாலையில் இப்போராட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் கே. சுந்தரமூா்த்தி, மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் எஸ். சுபாதேவி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், சிஐடியு, விவசாயத் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா். மத்திய அரசு கலால் வரியைக் குறைத்து, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.