அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

நாகை கடைகளில் நகராட்சி அலுவலா்கள் சோதனை

நாகையில் நகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையின் போது, கடைகளில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் 2 டன் எடையிலான தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நாகையில் நகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையின் போது, கடைகளில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் 2 டன் எடையிலான தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில், நாகை நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி தலைமையில், சுகாதார ஆய்வாளா் அறிவழகன் மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் அடங்கிய குழுவினா் நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், பல கடைகளில் தடை செய்யப்பட்ட மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப்பைகள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, சுமாா் 2 டன் எடையிலான நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தொடா்புடைய கடைகளுக்கு ரூ. 200 முதல் ரூ. 500 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.