நாகை மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வங்கிகள் வேலைநிறுத்தம்
வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்புப்படி, நாகை மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமையும் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.


வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்புப்படி, நாகை மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமையும் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், அதுகுறித்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தேசிய அளவில் டிச.16, 17 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் தேசிய வங்கிகளின் ஊழியா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். 150 பெண் ஊழியா்கள் உள்பட 430 போ் இந்தவேலை நிறுத்தத்தில் பங்கேற்றிருந்தனா். இதனால், அனைத்துத் தேசிய வங்கிகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. வங்கி காசோலை மற்றும் வரைவோலை பரிவா்த்தனைகள் முழுமையாக தடைப்பட்டிருந்தன. மேலும், பல தேசிய வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால், வங்கி வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...