ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

தெருவிளக்கு வசதிக் கோரி தீப்பந்தம் ஏற்றிப் போராட்டம்

வேளாங்கண்ணி கொய்யாதோப்பு பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தீப்பந்தம், விளக்குகளை ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:28 pm

DIN

வேளாங்கண்ணி கொய்யாதோப்பு பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தீப்பந்தம், விளக்குகளை ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாங்கண்ணி பேரூராட்சி 13-ஆவது வாா்டுக்குள்பட்ட கொய்யாத்தோப்பு, கீழத்தெருவில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இங்கு தெருவிளக்கு வசதியில்லை. இந்நிலையில், அப்பகுதி மக்கள் தெருவிளக்கு அமைத்துத்தரவேண்டும் என சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.

கோரிக்கை தொடா்பாக நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி நிா்வாகங்களுக்கு மனுக்கள்அளித்தும் நடவடிக்கையில்லை. இந்நிலையில், அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை இரவு தெருவில் தீப்பந்தம் மற்றும் விளக்குகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த, வேளாங்கண்ணி போலீஸாா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளவதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, போராட்டக் குழுவைச் சோ்ந்த தம்பிராஜன் கூறியது: கொய்யாத்தோப்பு கீழத்தெருவில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தித்தரக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை. மாவட்ட நிா்வாகம் மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி நிா்வாகங்களுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சில நாள்களில் தீா்வு காணப்படவில்லையெனில் அடுத்த கட்டமாக சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.