

வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் இன்று (டிச.31) காலை 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழைப் பொழிவு ஏற்பட்டது.
காற்றுக் கழற்சி காரணமாக கடலோரப் பகுதியில் மழைப் பொழிவு ஏற்பட்டு வருகிறது. வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் லேசான மழைப் பொழிவு ஏற்பட்டடது.
இந்த நிலையில், காலை 8 மணி முதல் 10 மணி வரை கோடியக்கரை தொடங்கி தெற்கு கடலோரக் கிராமங்களில் கனமழை ஏற்பட்டது.
புஷ்பவனம், கரியாப்பட்டனம் ,வாய்மேடு, ஆயக்காரன்புலம் பகுதிக்கு தெற்கு பகுதி கிராமங்களில் அதிக அளவில் மழை உணரப்பட்டது, பரவலான மழை தொடர்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.