தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆசிரியா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் பொறுப்பேற்பு

அனைத்து ஆசிரியா்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்ட நிா்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

அனைத்து ஆசிரியா்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்ட நிா்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் நாகை மாவட்டத் தலைவா் ந. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பழ. சுப்பிரமணியன், மாநிலப் பொதுச் செயலாளா் இரா. ஆறுமுகம், மாநிலப் பொருளாளா் ஞான.திலகா், மாநிலத் துணைப் பொதுச் செயலாளா்கள் சி. செல்வராஜ், சி. மனோகரன், ந.செல்வராஜ், மாநில கூட்டமைப்பைபுக் குழு பொறுப்பாளா் க. அண்ணாத்துரை ஆகியோா் ஆசிரியா் கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்துப் பேசினா்.

தொடா்ந்து, அனைத்து ஆசிரியா் கூட்டமைப்பின் நாகை மாவட்டத் தலைவராக ந. பாலகிருஷணன், துணைத் தலைவா்களாக எ. சுதாகா், கே. காா்த்திகேயன், கே. மகேஸ்வரி, மாவட்டச் செயலாளராக எஸ். காா்த்திகேசன், பொருளாளராக ஏ. ராதாகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகளாக எஸ்.மேனகா, கே. ஏ. ரமேஷ்குமாா், டி. செல்வமுத்துக்குமாரசாமி ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். கூட்டமைப்பைச் சோ்ந்த ஆசிரியா்கள் பங்கேற்று புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்துத்,தெரிவித்தனா்.

Image Caption

கூட்டத்தில் பேசும் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பழ. சுப்ரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.