நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் ஓம் பிரகாஷ் மீனா. இவர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை கரோனர தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் காவல்துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள்-சார்பு ஆய்வாளர்கள், ஆளி நர்கள், ஊர்க்காவல் படையினர், மாவட்டக் காவல் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் என 100 பேர் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.