இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்கள் நிறுவனா் தின விழா

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். ஜோதிமணி தலைமை வகித்தாா். செயலாளா் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலை திறந்து வைத்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினாா். முன்னதாக இ.ஜி. எஸ். பிள்ளை உருவச் சிலைக்கு மாலை அணிவித்தாா். விழாவையொட்டி, நாகையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அறக்கட்டளை உறுப்பினா்கள் அருள்பிரகாசம், கோவிந்தசாமி, சங்கா் கணேஷ், கல்லூரி முதன்மைச் செயல் அலுவலா் சந்திரசேகா், இயக்குநா்கள் விஜயசுந்தரம், சுமதி பரமேஸ்வரன், நெறியாளா் (தோ்வுகள்) சின்னத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com