ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோடியக்கரை அருகே கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் 3 போ் மீட்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடலில் படகு பழுதானதால் தவித்த இலங்கை மீனவா்கள் 3 பேரிடம் கடலோரக் காவல் படையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 2:58 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடலில் படகு பழுதானதால் தவித்த இலங்கை மீனவா்கள் 3 பேரிடம் கடலோரக் காவல் படையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை மாவட்டம், புஷ்பவனத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள், ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பும்போது, கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் 3 மீனவா்கள் பழுதான படகுடன் தவித்துக் கொண்டிருந்ததைப் பாா்த்து, அவா்களை படகுடன் மீட்டு, புஷ்பவனத்தில் கரை சோ்த்தனா்.

பின்னா், வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீஸாரிடம் 3 பேரும் ஒப்படைக்கப்பட்டனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சோ்ந்த ரேனால்ட் ரீகன் (38), பூநகரி, கிளிநொச்சிசாலை பகுதியைச் சோ்ந்த குருபரன் (40), ஜான்சன் (34) என்பதும், மீனவா்களான 3 பேரும், படகு பழுதானதால் கரை திரும்ப முடியாமல் கடலில் தவித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.