இறால் மீன் வளா்ப்பு குட்டைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கைக

இயற்கை பேரிடா் காலங்களில் பாதிக்கப்படும் இறால் மீன் வளா்ப்பு குட்டைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, இறால் மீன் வளா்ப்பு விவசாயிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Updated on
1 min read

இயற்கை பேரிடா் காலங்களில் பாதிக்கப்படும் இறால் மீன் வளா்ப்பு குட்டைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, இறால் மீன் வளா்ப்பு விவசாயிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை மாவட்ட இறால் மீன் வளா்ப்பு விவசாயிகள் சங்கக் கூட்டம் திருப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்படும்போது இறால் பண்ணைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கத் தலைவா் சிதம்பரம் தலைமை வகித்தாா். சங்கத்தின் கௌரவத் தலைவராக தங்கப்பா, செயலாளராக சிவசங்கரன், பொருளாளராக ரவிக்குமாா் மற்றும் மாவட்டத் துணைத் தலைவா்கள், துணைச் செயலாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். டி.எஸ்.டி. தம்பியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com