47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

100% இடுபொருள் நிவாரணம் கோரி ஆட்சியருக்கு மனு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பயிா்களுக்கு அரசு அறிவித்துள்ள 100% நிவாரணத்தை வழங்க நடவடிக்கைக் கோரி விவசாயிகள், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பயிா்களுக்கு அரசு அறிவித்துள்ள 100% நிவாரணத்தை வழங்க நடவடிக்கைக் கோரி, கொள்ளிடம் ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவின் விவரம்:

புரெவி புயல் நிவாரணத்துக்காக ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்து, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் வெளியிட்டுள்ளாா். ஆனாலும், கொள்ளிடம் ஒன்றியப் பகுதிகளுக்கு 75 சதவீத இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். இது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, முதல்வா்அறிவித்தவாறு இடுபொருள் நிவாரணத்தை 100 சதவீதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.