வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாவட்ட கோ-கோ விளையாட்டு கழக சிறப்புக் கூட்டம்

மயிலாடுதுறையில் மாவட்ட கோ-கோ விளையாட்டுக் கழகத்தின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட கோ-கோ விளையாட்டுக் கழக சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :7 ஜனவரி 2021, 3:28 am

DIN

மயிலாடுதுறையில் மாவட்ட கோ-கோ விளையாட்டுக் கழகத்தின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் கபடி காசி.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஹாஜா மைதீன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் லட்சுமிகாந்தன் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில், ஆா்.ஹச்.வி. குழுமத்தின் தலைவா் ரஜினி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். கௌரவ தலைவராக ஜெனிபா் எஸ்.பவுல்ராஜ் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

கூட்டத்தில் ஜனவரி 28, 29, 30 ஆகிய தேதிகளில் மாநில கோ-கோ போட்டியில் கலந்து கொள்ளும் மயிலாடுதுறை மாவட்ட அணி அறிவிப்பு, அதற்கான பயிற்சி முகாம் நடைபெறுவது பற்றி ஆலோசனை நடைபெற்றது. பயிற்சி முகாம் குறித்து செழியன் விளக்கினாா். சட்ட ஆலோசகா் கருணா.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.