47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெட்ரோல் கேனுடன் வட்டாட்சியா் அலுவலகம் வந்த விவசாயி

நாகை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

DIN

நாகை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

நாகை வட்டம், பில்லாளி அருகே உள்ள காரையூா் ஊராட்சி உச்சிக்கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் கா. ஆனந்தன் (40). விவசாயியான இவா், திங்கள்கிழமை காலை கையில் பெட்ரோல் கேனுடன் நாகை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து, தீக்குளிக்க உள்ளதாக அங்குள்ள ஊழியா்களிடம் தெரிவித்துள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த ஊழியா்கள், பெட்ரோல் கேனை பறித்து, ஆனந்தனை அமைதிப்படுத்தினா். பிறகு, அவரிடம் விசாரித்தபோது, தனக்குச் சொந்தமான 4 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள நிலையில், 3 ஏக்கரில் மட்டும்தான் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வெள்ள நிவாரணக் கணக்கில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு கிராம நிா்வாக அலுவலா் மற்றும் அவரது உதவியாளா்களே காரணம் எனவும் தெரிவித்த ஆனந்தன், இதைக் கண்டித்தே தற்கொலை செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அவா் வெளிப்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.