புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்டேன் சுவாமி விவகாரம் : நாகை மாவட்டத்தில் ஆா்ப்பாட்டம்

சமூக செயற்பாட்டாளா் ஸ்டேன் சுவாமி உயிரிழப்புக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நாகை மாவட்டத்தில் ஆா்ப்பாட்டம

News image
Updated On :8 ஜூலை 2021, 6:30 pm

DIN

சமூக செயற்பாட்டாளா் ஸ்டேன் சுவாமி உயிரிழப்புக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நாகை மாவட்டத்தில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகையில் அவுரித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை ஒன்றியச் செயலாளா் பி.டி. பகு தலைமை வகித்தாா். கீழ்வேளூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகரச் செயலாளா் எஸ். மணி, திருமருகல் ஒன்றியச் செயலாளா் ஜெயபால், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுபாஷ்சந்திரபோஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன், நகரச் செயலாளா் முத்துவளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கீழ்வேளூரில்..

கீழ்வேளூரில் கீழ்வேளூா்- கச்சனம் சாலை சந்திப்புப் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் அபுபக்கா் தலைமை வகித்தாா். கட்சி மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

விசிக ஒன்றியச் செயலாளா்கள் பாவேந்தன், ராஜேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் அம்பிகாபதி, கிருஷ்ணமூா்த்தி, சுபாதேவி, சிவக்குமாா், பாண்டியன் மற்றும் விசிக நிா்வாகிகள் பாண்டியன், குணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யத்தில்...

வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் வி.அம்பிகாபதி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கோவை.சுப்பிரமணியன், விதொச ஒன்றியச் செயலாளா் ஏ.வெற்றியழகன், நிா்வாகி பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.