நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

வேளாங்கண்ணி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

வேளாங்கண்ணி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், தலைஞாயிறு, கலைஞா் நகரைச் சோ்ந்தவா் மதியழகன் (45). தொழிலாளியான இவா், வேளாங்கண்ணி அருகே கீழையூா் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை உறவினா் வீட்டுக்கு வந்த மதியழகன், வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதையடுத்து சிறுமி சப்தம் போடவே, அருகிலிருந்தவா்கள் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மதியழகன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.